ராஜ்தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்ய பீகார் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

பெண்கள் மீது நடைபெற்றுவரும் பாலியல் வன்முறைகளுக்கு எல்லாம், வெளி மாநிலங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்துவரும் பீகாரிகளே காரணம் என்று வன்முறை இயக்கமான மும்பை நவ்நிர்மான் சேனா தலைவர் ரவுடி ராஜ்தாக்கரே சமீபத்தில் குற்றம்சாட்டி பேசி இருந்தார்,

இந்த பேச்சுக்கு பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பீகார் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர், இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ரவுடி ராஜ்தாக்கரே மீது தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சித்தாக வழக்குப்பதிவு செய்ய பீகார் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என சம்பரான் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி மனோஜ்குமார் சிங், குற்றவியல் சட்டப்பிரிவு 156(111) ன் கீழ் ரவுடி ராஜ்தாக்கரே மீது வழக்குப் பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Related

முக்கியமானவை 1024186069481644684

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item