முவாற்றுப்புழா பேராசிரியர் கைவெட்டு வழக்கு: 2 பேருக்கு ஜாமீன்

கேரள மாநில முவாற்றுப்புழாவில் நபி(ஸல்...) அவர்களை அவமதிக்கும் வகையில் கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியர் ஜோசப்பின் கைவெட்டப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் என போலீசாரால் கைதுச் செய்யப்பட்ட ஜாஃபர் மற்றும் அஷ்ரஃப் ஆகியோருக்கு எர்ணாகுளம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கடந்த வருடம் ஜூலை மாதத்தில் இருவரையும் கைவெட்டு வழக்குத் தொடர்பாக போலீசார் கைதுச் செய்திருந்தனர். கைதுச் செய்யப்பட்டு 180 தினங்கள் கழிந்ததால் நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவர்களிருவரும் இவ்வழக்கில் முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

செய்தி:தேஜஸ்

Related

SDPI 4101377982413368349

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item