ஆதாரம் சேகரிப்பு என்ற பெயரில் நாடகமாடி அப்துல் நாஸர் மஃதனியை அலைக்கழிக்கும் கர்நாடக போலீஸ்

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை கைதுச் செய்த கர்நாடகா போலீஸ், பின்னர் அவரை நேற்று குடகு என்ற இடத்தில் ரகசிய ஆலோசனையில் பங்கேற்றார் என்றுக்கூறப்படும் லகாரி எஸ்டேட்டிற்கு அவருடைய உடல்நிலையை கவனத்தில் கொள்ளாமல் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி 310 கிலோமீட்டர் பயணம் செய்து அழைத்துச் சென்றனர்.

மாலை 6.45 மணிக்கு லகாரி எஸ்டேட்டை சென்று அடைந்த வாகனத்திலிருந்து மஃதனியை வெளியே இறக்காமலேயே ஆதாரங்களை சேகரித்தனர் கர்நாடகா போலீசார்.

மஃதனி வருவதையறிந்து பா.ஜ.க பஜ்ரங்தளத்தைச் சார்ந்தவர்கள் சிலர் அப்பிரதேசத்தில் கூடி நின்று அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக கோஷமிட்டனர். ஆதாரம் சேகரிப்பு என்றபெயரில் மஃதனியை அலைக்கழிக்கும் போக்கை கையாளுகின்றனர் கர்நாடகா போலீசார்.

Koothanallur Muslims
பாலைவனதூது

Related

Police 9104219199300152871

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item