ஹிந்துத்துவா தீவிரவாதத்தை மென்மையான முறையில் கையாளுகிறது மீடியா - சி.பி.ஐ(எம்)

திரிச்சூர்:'முஸ்லீகளை தீவிராதிகளாக மிக கடுமையான முறையில் சித்தரித்து காட்டும் மீடியா, ஹிந்துத்துவ தீவிரவாத விவகாரத்தில் மட்டும் மிகவும் மென்மையான போக்கை கையாளுகிறது' என்று கேரள மாநில சி.பி.ஐ(எம்) செயலாளர் பினாரி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

'மதத் தீவிரவாதமும், மீடியாவின் பங்கும்' என்ற தலைப்பில் திரிச்சூரில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்கே உண்மைகளும் பித்தலாட்டங்களும் வெளிவந்து விடுமோ! என்று பயந்து தான், ஹெட்லியை இந்திய அதிகாரிகளிடமிருந்து அமெரிக்கா மறைத்து வருகிறதாக அவர் சூசகமாக தெரிவித்தார்.

'அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கும் எங்கிருந்தோ நல்ல பண உதவி அளிக்கப்படுகிறது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நரேந்திர மோடியின் ரத்தக்கறை படிந்த கைகளை, வளர்சிக்கான கைகள்!? என்று சிலர் வர்ணிப்பதற்கு அவர் தன் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

source:Twocircles.net
நன்றி : பாலைவனதூது
koothanallur muslims

Related

muslim 7413453152540068299

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item