காதியானிகளுக்கு எதிராக சமுதாய அமைப்புகள் ஓரணியில்....

இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பிறகு ஒரு நபி தோன்றியுள்ளார் என மார்க்கத்தை தன் மனோ இச்சைக்கு பயன்படுத்திய மிர்ஸா குலாமின் புதிய மதமான காதியானி அஹ்மதியாக்கள் மற்றும் நவீன குழப்பவாதிகள் 19 கூட்டத்தார் குறித்து ஆலோசனை நடத்த வேண்டி 16.12.2009 அன்று சென்னையில் ஷரீஅத் பாதுகாப்பு பேரவை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அதில் தமிழகத்தின் அனைத்து சமுதாய அமைப்புகளும் கலந்து கொண்டன. தமுமுக, இதஜ, முஸ்லிம்லீக், தேசியலீக், மறுமலர்ச்சி முஸ்லிம்லீக், ஜமாஅத்தே உலமா ஹிந்த், ஜமாஅத்தே இஸ்லாமி, பி.எஃப்.ஐ, தமிழ்நாடு தொண்டு நிறுவனம், முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு, ஈ.வி.க, அஹ்லே ஹதீஸ், தஃப்லிக் ஜமாஅத், காஸிஃபுல் ஹுதா உட்பட அனைத்து அமைப்புகளும் கலந்து கொண்டன.

இதன் பிரதிநிதிகளாக ஹைதர்அலி, முனீர், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, குலாம் முஹம்மது, சிக்கந்தர், தெஹ்லான் பாகவி, ஜின்னா, நிஜாமுதீன் மன்பஈ, ஷம்ஸுதீன் காஸிமி, முஹம்மது கான் பாகவி உட்பட சமுதாய தலைவர்கள், ஆலிம் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடினர்.

அல்லாஹுடைய மார்க்கத்திற்கு எதிராக கலகம் செய்யும் காதியானிகள் மற்றும் 19 கூட்டத்தினரை முஸ்லிம்கள் அல்ல என தீர்ப்பளிக்க முடிவு செய்தனர். இவர்கள் நிராகரிப்பாளர்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ். பொதுவான பிரச்னையில் தீர்ப்பு எடுக்க சமுதாய அமைப்புகள் ஓரணியில் இணைந்தது மகிழ்ச்சியினை அளிக்கிறது.

Related

TMMK 5914696141318859446

Post a Comment

  1. காத்தமுன்னபிய்யீன் - ஓர் ஆய்வு
    http://jafarla.blogspot.com/2010/06/blog-post_3702.html

    ReplyDelete
  2. அல் குப்று மிள்ளதுன் வாஹிததுன் பொய்யர்கள் ஒரே அணியில் இருப்பார்கள். www.jafarla007.blogspot.com

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item