முத்துப்பேட்டை : பி.ஜே.பி யினர் மீது தமுமுக வழக்கு



முத்துப்பேட்டையில் 11/12/2009 அன்று முத்துப்பேட்டை நகர பா.ஜ.க வினர் பொதுக்கூட்டம் என்ற போர்வையில் கலவரத்தை தூண்டும் வண்ணம் முஸ்லிம்களையும்,தமுமுக வினரையும் தகாத வார்த்தை களாலும் கொலை வெறி மிரட்டலோடும் பேசி சென்றுள்ளனர். அந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க வின் ஹெச்.ராஜா முஸ்லிம்களை தரைகுறைவாக வாயல்சொல்ல முடியாத வார்த்தை களாலும், இழிவான முறையிலும் பேசியதுடன் முஸ்லிம்களை மிரட்டியும் சென்றுள்ளார். அதனை தொடந்து பேசிய பேட்டை சிவா,கருப்பு.மற்றும் சிலரும் முஸ்லிம்களையும்.தமுமுக வையும் கடுமையான முறையில் பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் மானங்கெட்ட வார்த்தை களால் திட்டியுள்ளனர்.

முத்துப்பேட்டை பாசிஸ கும்பலின் தலைவன்
கருப்பு
( ) முருகானந்தம்

ஒன்று திரண்ட நம் சகோதர்களை அமைதி படுத்திய தமுமுக வினர், நகர செயலாளர் வழக்கறிஞர் தீன்முஹம்மது தலைமயில் இன்று காலை காவல்நிலையம் சென்று ஹெச்.ராஜா,கருப்பு(எ)முருகானந்தம், பேட்டை சிவா ஆகியோர் மீது கொலைவெறியை தூண்டுதல் 307 or 506 (2), மதவெறியை தூண்டுதல் 153, பொய்யான செய்தியை பறப்பி மதகலவரத்தை தூண்டுதல் 505 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய சொல்லி புகார் கொடுத்து மனு ரஷீது பெற்றுள்ளனர்.

தமுமுகவினரிடம் காவல்துறை ஆய்வாளர் கூறும் போது குற்றவாளிகள் மீது மேலே கண்ட வழக்கு பிறிவின்படி முதல் தகவல்(FIR) அறிக்கை பதிவுசெய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

— முத்துப்பேட்டை முகைதீன்

Source : www.muthupet.org

Related

TMMK 8839599224565570593

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item