முர்ஸியை பதவியில் அமர்த்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் : JIH, PFI கோரிக்கை

எகிப்தில் ஜனநாயக ரீதியில் தேந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை இராணுவத்தைக் கொண்டு வெளியேற்றியது மிகவும் கவலைக்குரியது,

என ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் ஜலாலுத்தீன் உமரி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் கே.எம்.ஷரீஃப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் தலைவர்கள் தெவித்துள்ளனர்.

இது, அதிகாரத்தை இழந்த முன்னாள் அதிபர் முபாரக்கின் விசுவாசிகளான இராணுவ தலைவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டமிட்ட சதி.

ஜனாதிபதி முஹம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்ததும், அரசியலமைப்பை இடைநீக்கம் செய்ததும் எகிப்திற்கு மட்டுமல்ல அரபுலக ஜனநாயக முறைக்கே பின்னடைவாக அமைந்துள்ளது.

எகிப்தில் மீண்டும் ஜனநாயகத்தை கொண்டுவரவும், சட்ட ரீதியாக ஜனாதிபதியாக தேந்தெடுக்கப்பட்ட முர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்தவும்,

இந்திய அரசாங்கம் எகிப்திய இராணுவத்திற்கு தூதரகம் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும், என்று இந்திய இஸ்லாமிய தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Related

முக்கியமானவை 6527688469408515798

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item