ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு - ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சதியா?

ஆந்திரா தலைநகர்  ஹைதராபாத்தி்ன் மக்கள் நெருக்கடி நிறைந் சந்தைகள், தியேட்டர்கள் நிரம்பிய தில்சுக் நகரில் நேற்று மாலை 7 மணியளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹைதராபாத்தில் தில்சுக்நகர் பகுதியில் உள்ள கோனார்க் திரையரங்கம் மற்றும் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடிப்புகள் நடைபெற்றன. நேற்று மாலை 7.01 க்கு முதல் குண்டு வெடித்தது. 7.05-க்கு இரண்டாவது குண்டும், அடுத்த 15-வது நிமிடத்தில் மூன்றாவது குண்டும் வெடித்தது. மேலும் அப்பகுதியின் நடைமேடை ஒன்றிலிருந்து வெடிக்காத குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரவு வெடித்தது டிபன் பாக்ஸ் வகை குண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது.  குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருக்கிறதா? என்பதை அறிய வெடிகுண்டு சோதனை நடத்தினர். மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. உள்ளூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சைக்கிள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில்தான் ஒரு குண்டு வைக்கப்பட்டு இருந்ததாக கருதப்படுகிறது. மற்றொரு வெடிகுண்டு, டிபன் பாக்ஸ் குண்டு ஆகும். சிதைந்த நிலையில் அந்த டிபன் பாக்ஸ் கண்டெடுக்கப்பட்டது. வெடிக்காத நிலையில் ஒரு குண்டு கண்டுபிடிக்கபப்ட்டது. குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக, தேசிய புலனாய்வு ஏஜென்சி(NIA) நிபுணர்கள் குழு, தனி விமானம் மூலம் விரைந்தது. இக்குழு, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் மாதிரிகளை சேகரித்தது. குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை.

குண்டுவெடிப்பை அடுத்து, ஆந்திர பிரதேச மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சதியா?

இந்த குண்டு வெடிப்பிற்கும் புனேயில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதால் ஹிந்துத்துவ தீவிரவாத சக்திகள் கோட்சே பாணியில் தாக்குதல் நடத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்தியாவில் நடந்த 16 குண்டு வெடிப்புகளுக்கு ஹிந்துத்துவ தீவிரவாத சக்திகள் தான் காரணம் என்று ஆதாரத்துடன் நிருபிக்க பட்டுள்ளது. இதுவரை RSS, VHP போன்ற ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் பொறுபேற்கவில்லை. வழக்கம் போல் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறை இறங்கியுள்ளது.

Related

முக்கியமானவை 5583005635545484828

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item