ஹைதராபாத்தை அயோத்தியாக மாற்றுவோம் - முஸ்லிம்களுக்கு தொகாடியா எச்சரிக்கை

ஹைதராபாத்தின் புகழ் பெற்ற சார்மினார் அருகே கோவில் கட்ட வேண்டும் என்று பாஜக கோரியதை தொடர்ந்து சில வாரங்களாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது,

சார்மினார் வளாகத்தினுள் கோவில் கட்ட வேண்டும் என்று பாஜகவின் கோரிக்கையை தொடர்ந்து பாஜகவின் மிரட்டலை காங்கிரஸ் அலட்சியப்படுத்துகிறது என்று கூறி காங்கிரஸுக்கு கொடுத்த வந்த ஆதரவை மஜ்லிஸே இத்திஹாதுன் முஸ்லீமின் அமைப்பு வாபஸ் பெற்றுள்ளது,

இச்சூழலில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த தடை செய்யப்பட வேண்டிய காவி பயங்கரவாத இயக்கமான விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா சார்மினாரில் பாக்கியலஷ்மி கோவில் அமைப்பது கோடிக்கணக்கான இந்துக்களின் உரிமை பிரச்னை என்றும் கோவில் கட்டுவதை முஸ்லீம்கள் தடுக்க நினைத்தால் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கியதை போல் லட்சக்கணக்கான மக்களை திரட்டி கோவில் கட்டுவோம் என்றார்.

முஸ்லிம்களே... நன்றாக காதுகளை தாழ்த்தி கேட்டுக்கொள்ளுங்கள், பாக்கியலட்சுமி ஆலயம் என்பது இந்துக்களின் லட்சியம்.

தடுக்க நினைத்தால் சார்மினார் தவிடு பொடியாவதுடன் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஆணவத்துடன் கொக்கரித்து முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் பிரவீன் தொகாடியா.

Related

முக்கியமானவை 2294182235574180687

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item