ஈரான் இப்பொழுது மிகவும் வலுவாக உள்ளது – காம்னஈ!

பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எக்காலத்தையும் விட இப்பொழுது ஈரான் வலுவாக உள்ளதாக அந்நாட்டின் உயர் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ தெரிவித்துள்ளார்.

ஈரானின் புரட்சி நாயகர் ஆயத்துல்லாஹ் அலி கொமைனி மரணமடைந்து 23-வது நினைவு தின நிகழ்ச்சியில் உரையாற்றினார் அவர்.

அப்பொழுது அவர் கூறியது: ‘இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு கடந்த 33 ஆண்டுகளாக ஈரானை ஒழித்துக்கட்ட எதிரிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டது, தேசம் வலுவடைந்துள்ளது என்பதன் சிறியது உதாரணமாகும்.

அணுசக்தி ஈரானை அஞ்சுவதை விட எதிரிகள் அஞ்சவேண்டியது இஸ்லாமிய ஈரான் ஆகும். ஈரானின் அணுசக்தி குறித்த குற்றச்சாட்டுகள் மேற்குலகின் பொய்களாகும். இதன் பெயரால் ஈரானை தாக்கினால் அது இஸ்ரேலுக்கு அழிவை உருவாக்கும்.’ இவ்வாறு காம்னஈ கூறினார்.

Related

சமுதாயம் 7131502719613864194

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item