அணு ஆயுதம் தாங்கிய கப்பலை ஈரான் எல்லையில் நிறுத்தியது அமெரிக்கா !

ஈரானில் அணுஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை ஈரான் மறுத்துள்ளது. மின் உற்பத்திக்காக அணு உலைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதை நம்ப மறுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடைவிதித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரபு நாடுகளில் இருந்து புறப்படும் எண்ணை கப்பல்கள் ஸ்ரெய்ட் ஆப் ஹோர்மீஸ் துறைமுகம் வழியாக செல்ல ஈரான் மறைமுக தடைவிதித்தது. இங்கு அடிக்கடி கடலில் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, விமானம் தாங்கி போர்க்கப்பலை அரபு வளைகுடா பகுதிக்கு அனுப்பியது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரானில் இருந்து தான் கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்கிடையே, போர்ச்சுக்கல், இத்தாலி, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய 6 நாடுகளுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணை சப்ளையை நிறுத்த போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இது விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. அனைத்துக்கும் மேலாக அதிநவீன அணு தொழில் நுட்பத்தை ஈரான் அறிவித்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த் தியுள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தனது நட்பு நாடான இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. எனவே, இஸ்ரேலின் பாதுகாப்புக்காக தனது ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை ஸ்ரெய்ட் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகம் பகுதிக்கு அனுப்பி உள்ளது.

இந்த போர்க்கப்பலில் அணு ஆயுதங்கள் உள்ளன. இது ஸ்ரெய்ட்ஸ் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகத்தில் இருந்து 21 கடல் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதன் அருகே 2 கடல் மைல் தூரத்தில்தான் ஈரான் கப்பற்படை படகுகள் ரோந்து சுற்றி வருகின்றன. இதனால், அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. அமெரிக் காவும், ஈரானுக்கும் போருக்கு தயாராக உள்ளதால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related

சமுதாயம் 4575814615759260781

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item