சுதந்திர தின அணிவகுப்புக்கான பயிற்சிகள்

வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக! என்ற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகிறது. தீண்டாமை இல்லாத இந்தியா, வகுப்பு வாதம் இல்லாத‌ ஊழல் இல்லாத இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து சமுதாய மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டும், என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இப்பேற்பட்ட அணிவகுப்பை நடத்தி வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் உறுப்பினர்களின் நேர்த்தியான நடை மற்றும் ஒழுக்கமான வழிகளை கண்ட தமிழ முஸ்லிம் மக்களுக்கு சதந்திர வேட்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது.

கடுமையான பயிற்சியின் மூலமாகவே இத்தகைய நேர்த்தியான அணிவகுப்பை நடத்த முடியும் என்பதுதான் உண்மை. இன்னும் சரியாக 2 மாதங்களே உள்ள நிலையில் அணிவகுப்பு கேடர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவது நடைபெற்று வருகிறது. இறைவன் கிருபையால இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ முஸ்லிம்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பு இனிதே நடைபெறும்.


POPULAR FRONT OF INDIA

Related

SDPI 4279666624561823578

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item