முஸ்லிம்கள் பாபர் மசூதி இடத்தை விட்டுத் தரவேண்டும்: கட்டியார்

Vinay Katiyar
அயோத்தியில் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதி அமைந்திருந்த பிரச்சனைக்குரிய இடத்தை முஸ்லிம்கள் விட்டுத் தரவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சித் தலைவர் வினய் கட்டியார் கேட்டுக் கொண்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழியேற்படுத்தும் வகையில் முஸ்லிம்கள் பிரச்சனைக்குரிய அந்த இடத்தை விட்டுத் தருவதன் மூலம் தேச நலன் காக்கப்படும். இந்தியர்களின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவதாகவும் இது அமையும் என்று வினய் கட்டியார் அயோத்தியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

முஸ்லிம்கள் இவ்வாறு செய்ய முன்வராவிட்டால், நாடு முழுவதும் நில உரிமைகள் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

வினய் கட்டியாரை பாரதீய ஜனதா கட்சியிலிருந்து நீக்காவிட்டால் சாதுக்கள் பாஜகவை விட்டு விலகுவார்கள் என்று அகாரா பரிஷத்தின் தலைவர் கியான்தாஸ் கூறியிருப்பது தொடர்பாகக் கேட்கப்பட்டதற்கு, அவரது வார்த்தைகள் தனக்கு ஆசிர்வதம் அளிப்பது போலாகும் என்று கூறினார்.

KOOTHANALLUR MUSLIMS 

Related

RSS 7785923184212622863

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item