மனிதநேய மக்கள் கட்சி மாநாடு முடிந்தவுடன் முதல் மனிதநேயம் அரங்கேறியது

மனிதநேய மக்கள் கட்சியின் முதல் மாநாடு முடிந்து வந்து கொண்டிருந்த போது, உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆசனூர் என்னும் ஊரில், எங்களை முந்தி சென்று கொண்டிருந்த ஒரு டூரிஸ்ட் பஸ் மீது சரக்கு லாரி ஒன்று இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அதனால் டூரிஸ்ட் பஸ் நிலை தடுமாறி வலது பக்கமாக பள்ளத்தில் உருண்டு சகதி நிறைந்த கால்வாயில் தலைக்கீழாக சரிந்து புதைந்தது. இதனைக் கண்ட பின்னால் வந்து கொண்டிருந்த தமுமுக ஏர்வாடி பஸ்சும், தென்காசி தமுமுகவினர் வந்தி ருந்த பஸ்களும், வேன்களும் நிறுத்தப் பட்டு, தமுமுக தொண்டர்கள் சகதியில் குதித்து பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து மக்களை மீட்டனர். அதில் குழந்தைகள் உட்பட பலருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. அவர்களை உடனடியாக தமுமுக சகோதரர்கள் மீட்டு உடனே அவசர போலீஸ் 100 எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர். உளுந்தூர்பேட்டை பல் மருத்துவமனை, சுப்புலெட்சுமி மருத்துவ மனையின் அவசர ஊர்திகள் வந்தன. அதன்மூலம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்டோர் தமுமுகவினரிடம் ''நாங்கள் மதுரையைச் சார்ந்த சௌராஷ்ட்ரா இனத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் கோயிலுக்குப் போய் திரும்பிக் கொண்டிருந்தோம். எங்கள் நிலையைப் பார்த்த பிறகும் பலர் வேடிக்கைப் பார்த்தவாறு போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் நீங்கள் மட்டும் இத்தனை வண்டிகளையும் நிறுத்தி உதவி செய்தீர்கள். நீங்கள் உதவி செய்யா விட்டால் நாங்கள் அனைவரும் இறந்திருப்போம். உங்கள் உதவிகளை நாங்கள் மறக்கவே மாட்டோம். உங்க ளுக்கு மிக்க நன்றி'' என்று கூறினர்.

மீட்புப் பணியில் வடசென்னை மாவட்டத் தலைவர் பி.எஸ்.ஹமீது, நெல்லை மாவட்ட துணைச் செயலாளர் எஸ். மிஸ்பாஹுல் ஹுதா, ஏர்வாடி நகர பொருளாளர் பகுர்தீன், தென்காசி நகர செயலாளர் அப்துல் ரஹ்மான், தென்காசி ஆம்புலன்ஸ் டிரைவர் சலீம் ஆகியோ ரும் தொண்டர்களுடன் சேர்ந்து களப் பணியாற்றினர்.

மனிதநேய மக்கள் கட்சி மாநாடு முடிந்தவுடன் முதல் மனிதநேயம் அரங்கேறியது.

அதுபோல் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மாநாட்டுக்கு வரும்போது அதிகாலை 6:00 மணியள வில் சென்னையை நெருங்கும் போது லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதைக் கண்டனர். உடனே தலைக்குப்புற கவிழ்ந்த காரில் இருந்த நான்கு பேரை காப்பாற்றி ஆம்பூலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த சேதுராமன் என்பவரது பிராமண குடும்பம் தமுமுகவினரை கட்டி அனைத்து நன்றி கூறியது.

Related

TMMK 1154641001960211067

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item